பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி டி ரவி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:வருகிற 12-ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகை உறுதியாக உள்ளது.ஒமிக்ரோன் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு:நாங்கள் ஆளும் கட்சியும் இல்லை முக்கிய எதிர்க் கட்சியும் இல்லை, நாங்கள் களத்தில் ஆயத்தமாக உள்ளோம்.வெள்ள பாதிப்பு நிவாரணம் குறித்த கேள்விக்கு:தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைப்படி தமிழகத்திற்கு நிதி அளிக்கப்படும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அழைக்கப்படும் அந்த வகையில் தமிழகமும் நிதியை பெறும். முதலில் மாநில அரசு தங்களுடைய பங்களிப்பை முதலில் வெளியிட வேண்டும் பிறகு மத்திய அரசு வெளியிடும் என்றார்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.