மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் உட்பட்ட 98வது வார்டு ஓனாக்கள் மூன்று தெருக்கள் உள்ளன இதில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர் இதனால் பொதுமக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கக் கூடிய தள்ளப்பட்டனர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுதொடர்பாக சத்திய பாதை இணையதள செய்தி தளத்தை தொடர்பு கொண்ட அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என நம்மிடம் புகார் எடுத்தனர் இது குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டதில் லாரி மூலமாக கூட இவர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என தெரியவந்தது உடனடியாக இதுகுறித்து 25 தேதியன்று செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அன்றே அவர்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கினார்கள் மேலும் இன்று குழாய் மூலமாக மீண்டும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது 30 நாட்கள் மேலாக குடிநீர் வழங்காமல் இருந்த நிலையில் செய்தி வெளியிட்ட இரண்டே நாட்களில் உடனடியாக தீர்வு காண உதவிய சத்தியப்பாதை இணையதளத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.