13
தமிழகத்தில் 1972 – ல் அதிமுக உதயமானது. அப்போது திமுகவில் இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள் அதிமுகவில் இணைந்தனர். எம்ஜிஆர் மற்றும் அதிமுக கொடியை கையில் பச்சைகுத்திகொண்டனர். பலரும் தற்போது வேறு கட்சியில் கொடிகட்டி பறக்கின்றனர். ஆனால் உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் அவர் மறைந்தாலும் இன்றும் அவருக்காக சிலர் கட்சியில் இருப்பது மிகவும் ஆச்சரியாக உள்ளது. இதனை நம்மிடம் பகிர்ந்தார் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த ரசிகர் கே.ஆர்.பாபு. 1973-ல் சென்னை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆருடன் எடுத்த போட்டோவை காட்டி கண்கலங்குகிறார். இப்படிப்பட்ட ரசிகர்கள் இன்றும் அவரை வணங்கி வருவது மெய்சிலிர்க்க வைத்தது.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.