திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் பழுதான பள்ளி கட்டடங்களை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர் நெல்லையில் தனியார்பள்ளியில் ஏற்பட்ட இந்த கட்டிட விபத்து காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த, பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்களை உடனடியாக இடிக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாவட்ட கலெக்டர் பா முருகேஷ் உத்தரவின் பேரில் செங்கம் கல்வி மாவட்டத்தில் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பள்ளி துணை ஆய்வாளர் குணசேகரன் அமர்நாத் புதூர் தலைமையாசிரியர் கோவிந்தராஜ் ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ் உள்ளிட்ட கல்வித் துறையைச் சேர்ந்த குழு செங்கம் ஒன்றிய செங்கம் மற்றும் புதுப்பாளையம் 29 உயர்நிலைப் பள்ளிகளும் 43மேல்நிலைப் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வு மேற்கொண்டதில் பயனற்ற மற்றும் பழுதான வகுப்பறை கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்களும் அடங்கும். மேலும் இந்த கட்டிட பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி கட்டிடங்களை இடித்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர் மேலும் நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாத கட்டிடப்பகுதிகளை உடனடியாக இடிக்க உத்தரவிட்டனர் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில்;செங்கம் கல்வி மாவட்டத்தில் உயர்நிலை மேல்நிலை என 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டோம் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், கல்வி தரம் உயர்த்துவதும், குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பழுதான கட்டிடங்களை அருகில் பள்ளி மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது அரசுப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவது மேலும் பழுதான கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தக் கல்வி மாவட்டத்தின் சார்பில் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளோம்
14
previous post
You must be logged in to post a comment.