Home செய்திகள் அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் மருத்துவர் பலி

அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் மருத்துவர் பலி

by mohan

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் (42) இவரது மனைவி ப்ரீத்தி இவரும் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் நேற்று விடுமுறை தினம் என்பதால் கடந்த சனிக்கிழமை சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் தனது காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தார்.மதுரை மாவட்டம் கப்பலூர் மதுரை சுற்றுச் சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்தபோது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து காரின் பக்கவாட்டில் உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.இதனால்., ஆத்திரமடைந்த மருத்துவர் கார்த்திகேயன் பேருந்து நிறுத்துவதற்காக தனது காரில் அரசு பேருந்தை வேகமாக விரட்டி சென்று பரம்புப்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் பேருந்தை முந்த முயன்றபோது சாலை வளைவு பகுதி என்பதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை தாண்டி மதுரையிலிருந்து சிவகாசி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய வேகத்தில் பேருந்து காரை 50 அடி தூரம் இழுத்துச் சென்றது. இதில் காரில் வந்த மருத்துவர் கார்த்திகேயன் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச்சம்பவம் கண்ட அருகில் இருந்தவர்கள் விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் லட்சுமி லதா, காவலர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து., சம்பவ இடத்திற்கு திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் இறந்தவரின் உடலை அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.இதைத் தொடர்ந்து இறந்த மருத்துவர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மருத்துவர் கார்த்திகேயனின் தந்தை ரகுபதிராகவனும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. காரை உரசிச் சென்ற அரசு பேருந்து விரட்டிச் சென்று விபத்தில் சிக்கி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து தொடர்பான விசாரணையில் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமராவில் நெஞ்சை பதறவைக்கும் விபத்து காட்சி பதிவாகியிருந்தது இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!