இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கொருக்காம்பட்டி ஊராட்சி கோட்டைபட்டி கிராமத்தில் CSR நிதி ரூபாய் 15.47லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் குழந்தைகள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்அதனை தொடர்ந்து சேர்மன் பள்ளி குழந்தைகள் உடன் கலந்து உரையாடினார். குழந்தைகள் அனைவரும் புதிய கட்டிடம் அமைத்து கொடுத்தற்கு சேர்மன் நன்றி தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து சேர்மன் அந்த பகுதி மக்களிடம் பல்வேறு குறைகளை கேட்டு அறிந்தார். மிக விரைவில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறினார்.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார்,சிவகுமார் (கி.ஊ) பணி மேற்பார்வையாளர் ஞானகுரு ,உதவி பொறியாளர் சசிகலா, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன முருகன், வைஸ் முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி தங்கராஜ் மற்றும்,கிளை கழக செயலாளர்கள் சுந்தர்ராஜ், மூக்கையா, சந்தனமாரியப்பன்,தங்க மாரியப்பன், சுரேஷ் குமார், தங்கராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.