தென்காசியில் இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஜெஸ்லின் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி கவுரவித்தார். தென்காசி நகர SDPI மருத்துவ சேவை அணி மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா தென்காசி அஹமதுஷா மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் பாதுஷா, நகர செயலாளர் ஆசாத்,நகர துணைத் தலைவர் பீர் முஹம்மது, நகர துணைச் செயலாளர் மாஸ் காஜா மைதீன், நகர பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலாளர் ஷேக் ஜிந்தா மதார், மாவட்ட செயலாளர் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் சினா, சேனா சர்தார்,தொகுதி பொருளாளர் சுல்தான், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சமூக சேவகர் ஹாஜி செய்யது ஜலாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் மாவட்ட தலைவர் யாசர் கான், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், குழந்தைகள் நல மருத்துவர் பாபு, அரசு காச நோய் மருத்துவர் ஜாபர் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பாராட்டி உரிய ஆலோசனைகளை வழங்கினர்.இந்த நிகழ்வின் போது மாவட்டம் முழுவதிலும் இருந்து வருகை தந்திருந்த பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வரும் இரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வடகரை மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.