திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த விண்ணவனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் டைட்டான் நிறுவனம் சார்பில் நன்ஹிகலி திட்டத்தின் சார்பாக கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் டைட்டன் நிறுவனத்தின் அசோசியேட் மேனேஜர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் வண்டார்குழலி அனைவரையும் வரவேற்று பேசினார்.டைட்டன் நிறுவனம் சார்பில் நன்ஹிகலி திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான செங்கம் மற்றும் ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உபகரண பொருட்கள் இலவசமாக வழங்குவது மட்டுமின்றி மாணவிகளுக்கு டேப் மூலம் மாலை நேர வகுப்புகள் சமூக ஆர்வலர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து விண்ணவனூர் அரசுப் பள்ளியில் பயிலும் 96 பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம் வழங்கினார். அவர் பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, ஜவ்வாதுமலை பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக உள்ளது. இந்த சமயத்தில் கல்வித் தரமும் குறைந்துள்ளது. டைட்டான் நிறுவனம் மூலம் நன்ஹிகலி திட்டம் மூலம் செங்கம் மற்றும் ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில் 84 அரசு பள்ளிகளில் 5000 பள்ளி மாணவிகளுக்கு நவீன வசதிகளோடு டேப்லட் மூலமாக கல்வியை பயிற்சி அளித்து வருகின்றனர். வாழ்க்கையில் உயர கல்வியறிவுடன் கூடிய தனித்திறன் அவசியம். மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.மேலும் பள்ளி மாணவிகள் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்று பேசினார்விழாவில் செங்கம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் வட்டார கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜி, பள்ளி துணை ஆய்வாளர் முனைவர் குணசேகரன் மண்மலை தலைமையாசிரியர் ஜேம்ஸ் ,கிருஷ்ணன், திட்ட அலுவலர் சகாயமேரி,சாய்குமார், மது மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
15
You must be logged in to post a comment.