300, மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட கொரானா விழிப்புணர்வு பேரணியை மதுரை மண்டல சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கொடியசைத்து. விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கொரான தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டனர்.கல்லூரி துணைத்தலைவர் சந்தோச பாண்டியன் தலைமையில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.வட்டார மருத்துவர் Dr. சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்க சாமி, மற்றும் சுகாதா குழுவினர் கலந்துகொண்டனர்.நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் உள்ள வீடுகள் தோறும் சென்று கருணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா என கணக்கெடுப்பு நடத்தி னர் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டது குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.இதன்மூலம் 2வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு. தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.