செங்கம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி மனோகரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டும் நினைவுநாளை ஒட்டி, போளூர் சாலையிலிருந்து துக்காப்பேட்டை சாலை வரை ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற கழகத் துணைத் தலைவர் கே கே மணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் தனஞ்ஜெயன் வழக்கறிஞர் செல்வம் தினகரன் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை வேலு பானுமதி ராணி கிருஷ்ணமூர்த்தி வெங்கட் சசிகுமார் பத்மா முனி கண்ணு நகர பொறுப்பாளர் குப்புசாமி முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
7
You must be logged in to post a comment.