உசிலம்பட்டியில் வீதிவீதியாகச் சென்று கொரோனா தடு;ப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்து வருகின்றது.இதனால் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகின்றனர்..இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வீதிவீதியாகச் சென்று சுகாதாரத் துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.உசிலம்பட்டி கருப்புக் கோவில் தெருவில் நடைபெற்ற தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்தில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..