மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் புதிய வகை ஓமிக்ரான் (கோவிட்-3) வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் இன்று மதுரை விமான நிலையத்தில் ஓமிக் ரான் பரிசோதனை மையத்தை துவக்கி வைத்தார்.இன்று காலை 8 மணியளவில் மதுரை வந்த துபாய் விமானத்தில் வந்த (168 பயணிகள் மற்றும் 6 குழந்தைகள் உள்பட 174 பேருக்கு) நூத்தி எழுபத்தி நான்கு பேருக்கும் ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர், வணிகவரித்துறை அமைசசர் மூர்த்தி. சுகாதாரத்துறை செயளர் ராதாகிருஷ்ணன்.சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி, வட்டார மருத்துவர் சிவகுமார, மேற்பார்வையாளர் தங்கசாமி ஆகியோர் அடங்கிய 18 பேர் குழு ஓமிக்ரான் பரிசோதனைகள் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.