மதுரை பழங்காநத்தம் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் மூன்று ஆண்டு காலமாக சரியான முறையில் செயல்பட வில்லை என்றும் மினி கிளினிக் என்ற பெயரில் செயல்படுகிறது இங்கு கொரோனா காலகட்டத்திலும் பேரிடர் காலத்திலும் சரியாக செயல்படவில்லை தற்போது இங்கு உள்ள மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக மருத்துவர் வராததால் இப்பகுதி பொதுமக்கள் மருத்துவம் வசதி முறையாக கிடைக்கவில்லை என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நகர்வலர் அலுவலர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளையிலிருந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் வருவார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பதிவுசெய்து சிகிச்சை அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர் மேலும் மருத்துவமனை முறையாக செயல்படவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர் மேலும் இங்கு பணிபுரியும் செவிலியர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.