Home செய்திகள் புளியரை சோதனை சாவடியில் 36 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..

புளியரை சோதனை சாவடியில் 36 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..

by mohan

புளியரை சோதனை சாவடியில் நடந்த அதிரடி சோதனையில் ரூபாய் 36 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை கொண்டு வருவதை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச்சாவடியில் சார்பு ஆய்வாளர் முத்து கணேசன் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் விற்பனைக்காக சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டு வந்த கொல்லத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சங்கரன்(65) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 36,000 மதிப்பிலான 900 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!