10
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதலுடன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை செய்யவேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சியை சேர்ந்த 100 தூய்மை பணியாளர்கள் நேற்று 12-ம் தேதி வேலூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் கையுறை, ரெயின்கோட்,, முககவசம், கொடுக்கப்பட்டது.இவர்களுடன் 4 சுகாதார மேற்பார்வையாளர்களும் சென்று உள்ளனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒதுக்கி தரும் இடங்களில் தூய்மை பணி மேற்கொள்வார். இவர்களை சுகாதார அலுவலர் சிவக்குமார் வழிநடத்தி செல்வார்.
You must be logged in to post a comment.