Home செய்திகள் திருப்பரங்குன்றத்தில் ரஜினி பூரண நலம் வேண்டி ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து வழிபாடு.

திருப்பரங்குன்றத்தில் ரஜினி பூரண நலம் வேண்டி ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து வழிபாடு.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரஜினி ரசிகர்கள் சார்பில் ரஜினி பூரண நலம் வேண்டி 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர். முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குமரவேல், மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொருப்பாளர் பால தம்புராஜ், அழகர்திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் இதனைத் தொடர்ந்து வெயிலுகந்த அம்மன் கோவிலில் ரஜினியின் புதிய படமான அண்ணாத்த திரைப்படம் வெற்றிபெற ரசிகர் கோல்டன் சரவணன், முருகவேல் மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!