தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மார்பக புற்று நோய் கண்டறியும் முகாம் மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக் கிழமை நடந்தது.இதில் 30 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை, குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் இணைந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மார்பக புற்று நோய்க் கருத்தரங்கம் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் முகாம் 29.10.21 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் மார்பக புற்று நோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அந்த வகையில் கொண்டாடப்பட்டு வரும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, வெள்ளிக் கிழமை Eye breast scan, ஆரம்ப கட்டத்திலேயே மிகத் துல்லியமாக மார்பக புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் கருவி மூலம், கிம்ஸ் மருத்துவமனை புற்று நோய் நிபுணர்களால், தென்காசி மருத்துவமனை பெண் பணியாளர்களுக்கு எடுக்கப்பட்டது. இந்த முகாமை மீரான் மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் ஏற்பாடு செய்து இருந்தார். இணை இயக்குநர் மருத்துவர் வெங்கட் ரங்கன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் 3212 மாவட்ட ரோட்டரி ஆளுநர் டாக்டர் சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தென்காசி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.மருத்துவர் அப்துல் அஜீஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். KIMS மருத்துவமனை புற்று நோய் மார்பக சிகிச்சை நிபுணர் மருத்துவர் நிஷா மார்பக புற்று நோயின் அறி குறிகள், மருத்துவ வழிமுறைகள் பற்றி மருத்துவர்களுக்கு விரிவான முறையில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அகத்தியன் , கீதா, லதா,கார்த்திக் புனிதவதி,தமிழருவி, விஜயகுமார், ராஜலட்சுமி, முத்துக்குமாரசாமி, முகமது இப்ராஹிம், கீர்த்தி, தேவி உத்தமி, தயாளன்,ROTARIAN மாரிமுத்து, சாமி, சிவகுமார்,கர்னல்சம்சு, பிரதீப், காந்திமதி நாதன், ராஜகுலசெகேர பாண்டியன் மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 30 நபர்களுக்கு Eye breast scan எனப்படும் சிறப்பு மார்பக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் ROTARIAN காந்திமதிநாதன் நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.