12
வாணியம்பாடி. அக்.25-வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியிலிருந்து ஈரோடு செல்ல காவல்துறையில் பணியாற்றும் காவலர் சுரேஷ் (37) சாத்து மதுரையை சேர்ந்த முனிசாமி, பாகாயம் முருகேசன், ஆகியோர் காரில் சென்றனர். காரை கணியம்பாடியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஓட்டி சென்றார்.நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டாரஸ் லாரி மீது மோதியதில் காவலர் சுரேஷ் உயிரிழந்தார்.படுகாயம் அடைந்தமற்ற 3 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
You must be logged in to post a comment.