இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களை குறிவைத்து நகை பறித்துவந்த நான்கு நபர்கள் கைது.

மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ். எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களது தங்க நகைகளைப் பறித்துச்செல்லும் வழிப்பறிச் சம்பவங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டறிவதற்காகவும் மதுரை மாநகர காவல் ஆணையர் .பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (குற்றம்) இராஜசேகர் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை CCTV கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்த போது குற்றவாளிகள் மணி (எ) வைரமணி, மதன்குமார், சிவா மற்றும் விஜய் ஆகியோர்கள் என தெரியவந்ததது. இவர்கள் மதுரை மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களிலும், சமயநல்லூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு செயின் பறிப்பு சம்பவங்களிலும், இரண்டு வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரிய வந்தது. மேற்படி நபர்களிடமிருந்து 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 90 சவரன் தங்க நகைகள் மற்றும் மேற்படி வழிப்பறி சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.மேற்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட எதிரிகளை கண்டறிய CCTV கேமராக்களின் பதிவுகள் உறுதுணையாக இருந்தது. மேலும் காவல் ஆணையர் அவர்கள் CCTV கேமராக்களின் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும், காவல் அதிகாரிகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொது இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பொருத்துவதற்கு அறிவுரை வழங்கி வருவதன் பேரில் மதுரை மாநகரில் இதுவரை பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்..எனவே, பொதுமக்கள், தங்களது வசிப்பிடங்கள் மற்றும் தங்களது வணிக நிறுவன வளாகங்களில் CCTV கேமராக்களை பொருத்துமாறு மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..