மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் நற்பணிகள் செய்து வரும் டாக்டர்.அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக சாதனையாளர்கள் விருது விழா நடத்தி வருகின்றனர்.மதுரையில் சேதுபதி மேல்நிலை பள்ளி வளாகத்தில் தென்மண்டல அளவில் பல துறைகளில் சிறந்த சாதனையாளர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயராஜ் தலைமையில் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டுவில்சன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுநல பணிகள் மற்றும் பசுமை பணிகளில் சிறப்பாக சேவையாற்றுவதை பாராட்டி வழிகாட்டி மணிகண்டனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.இதுகுறித்து அவர் கூறுகையில்: அப்துல்கலாம் விருது வழங்கியவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இதுபோன்ற விருதுகள் சமூக சேவையில் நம்மை மேலும் ஊக்கப்படுத்தும் என்பது மகிழ்ச்சிக்குறியது.எனது எண்ணங்களை செயல்படுத்த பல்வேறு காலகட்டங்களில் என்னோடு களப்பணியில் பங்கேற்ற எனது அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிப்பதை கடைமையாக கருதுகிறேன் என்றார் வழிகாட்டி மணிகண்டன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.