இராஜபாளையம் 13வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்ளாட்சித் இடைத்தேர்தலில் 13-ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ராம் பிரபுவுக்கு ஆதரவாக மாலையாபுரம் பகுதியில் .ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் வீதி வீதியாக சென்று அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், நகர செயலாளர் ராணா பாஸ்கர்ராஜ் . பொது குழு உறுப்பினர் பாபுராஜ்.மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் தொண்டர்கள் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.