Home செய்திகள் உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது.மற்றொருவர் தப்பி ஓட்டம்.

உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது.மற்றொருவர் தப்பி ஓட்டம்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டிப் பகுதியில் போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமான முறையிpல் வந்தஇருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் வந்த இருவர் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்துள்ளனர்..அவர்களை சோதனை செய்ததில் கஞ்சர் விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்தது தெரிய வந்தது.இது தொடர்பாக சிந்துபட்டி போலிசார் கம்மாளப்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் மகன் ஜெயக்குமார்(39) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா ரூ1லட்சம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் தப்பி ஓடிய கரிசல்பட்டியைச் சேர்ந்த ஆதிராஜா (37) என்பவரை தேடி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!