11
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடக்கும் காரணத்தினால் மேலத்தெரு உஸ்வதுன்
ஹஸனா முஸ்லிம் சங்கம் சார்பில் இரவு நேரத்தில் மேலத்தெரு, சின்னக்கடை தெரு, சாலை தெரு, சங்குவெட்டி தெரு 500 பிளேட் பகுதிகள் முழுவதையும் பாதுகாக்க தனியார் செக்யூரிட்டிகள் சுமார் 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அப்பகுதி முழுவதையும் சுற்றி கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தகவலை பரிமாறி கொள்ள வாக்கிடாக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது இன்னும் சிறிது நாட்களில் அதிகமான செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு கீழக்கரை நகர் பகுதி முழுவதையும் பாதுகாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.