வேலூர் மாவட்டம் வேலூர் சலவன்பேட்டை திருக்குமரன் தெருவை சேர்ந்தவர் கஜலட்சுமி இவரது மகள் ஜீவிதா (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினேஷ் (30) என்பவருக்கு கடந்த 2015-ல் திருமணம் நடந்தது. இவர்களுகு அக்சயா (5) நந்தகுமார்(4) மற்றும் 6-மாத ஆண் குழந்தை உள்ளனர்.
தினமும் தினேஷ் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்தார்.நேற்று முன்தினம் தினேஷ் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து உள்ளார். இதனால் வாழ்க்கையை வெறுத்த ஜீவிதா நேற்று 3 குழந்தைகளையும் ஒரே சேலையில் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டா.தகவல் அறிந்தவேலூர் தெற்கு காவல்துறையினர் விரைந்து சென்று 4 பேரின் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கே.எம். வாரியர் வேலூர்
You must be logged in to post a comment.