6
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள18. வார்டுகளிலும் மழை நீர் வடிகால்,சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகளில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் நேற்று கொடைரோடு அருகேயுள்ள கொழிஞ்சிப்பட்டியில் நடந்த தூய்மை பணி சிறப்பு முகாமைதிண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர்மனோரஞ்சிதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் பேரூராட்சி பகுதியில்வார்டு வார்டாக சென்று பார்வையிட்டார். ஆய்வின்போது, அம்மையநாயக்கனூர் செயல் அலுவலர் ஜெயலட்சுமி. சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் சுகாதார மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.