சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே சாலையில் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் ரோந்து பணியில் இருந்தபோது விற்பனைக்காக காரில் மதுபாட்டில்களை கொண்டு வந்த புதுபட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சின்னதுரை(23) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 90 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.