Home செய்திகள் கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வயதான பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வயதான பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆவாரம் பட்டியைச் சேர்ந்தவர் குண்டுமழை(63),இவருடைய மனைவி பாப்பு (62).இவர்;கள் உசிலம்பட்டி அருகே ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு வந்துள்ளனர்.உத்தப்பநாயக்கனூர் அருகே மகாலிங்கபுரம் விலக்கு அருகே வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் டிவிஎஸ் எக்ஸ் பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த பாப்புவின் கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்.நிலை தடுமாறி கீழே விழுந்த தம்பதியினர் பின் எழுந்து இது குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!