மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் 143 வது பிறந்த நாள் விழாவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிட கழகம் சார்பாக உசிலம்பட்டி நகர தலைவர் பவுன்ராஜ் தலைமையில் ஒன்றியச் செயலாளர் ஜெயரூபன் சிங் முன்னிலையில் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் மன்னர்மன்னன் ஏழுமலை சிங்கராஜ் கவிஞர் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க நகரச் செயலாளர் ஜெ.டி.குமார் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் தென்னரசு தலைமையில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி நகரச் செயலாளர் மாரி தொகுதி செயலாளர் சின்னன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் விடுதலை சேகர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.