Home செய்திகள் எழுமலை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற ஒருவர் கைது..

எழுமலை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற ஒருவர் கைது..

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல்நிலையப் போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சீல்நாயக்கண்பட்டி கிராம விலக்கு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான முறையில் மூட்டையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது மூட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததும் அவற்றை எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.இது தொடர்பாக எழுமலை போலிசார் அத்திப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை (41) கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலைப்பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!