சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த த.மா.க. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:கொடநாடு கொலை வழக்கில் தமிழக அரசு பழி வாங்கும் போக்காக செயல்படுகிறதா?தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டுமே தவிர பழிவாங்கும் அரசாக திமுக இருக்கக்கூடாது.பொதுவாக கல்வியில் அரசியலை புகுத்தக் கூடாது. அப்படி செய்தால் இழந்த உயிர்கள் அழிவது வேதனையை அளித்துள்ளது..தமிழக அரசைப் பொருத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்.9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு9 மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி எந்தந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்த தொகுதிகளில் போட்டியிடக் கூடிய நிலையில் செயல்பட உள்ளோம்.கூட்டணி குறித்த கேள்விக்கு அதிமுகவுடன் கூட்டணி உள்ளோம் வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகள் கூட்டணியுடன் பேசி போட்டியிடுவோம் என பாமக தலைவர் ஜிகே வாசன் கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.