மதுரை ரயில்வே நிலையத்தில் கார் பார்க்கிங்கில் 21மணி நேரத்திற்கு கார் பார்க்கிங் கட்டணம் 500ரூபாய் வசூலிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதல் 3மணி நேரத்திற்கு 30ரூபாயும், அடுத்த 3மணி நேரத்திற்கு 50ரூபாயும், அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கு 70ரூபாய் என கட்டணம் வசூலிப்புபெரும்பாலான ரயில் பயணிகள் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ரயிலில் பயணிப்பது இல்லை. உறவினர்களை ரயில் வந்து இறக்கி விட்டு செல்வார்கள். அல்லது வீட்டிற்கு அழைத்து செல்வார்கள் ஆகவேரயில்நிலைய பார்க்கிங்கில் தேவையின்றி வாகனங்கள் நிறுவத்துவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த இது போன்ற நடைமுறை அமல் படுத்தப்படுகிற என்றும்,ரயில் நிலையத்தை சுற்றியுள்ள வணிகர்கள் வாகனங்களை இந்த ரயில் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்துவதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை அமல் படுத்தப் பட்டிருக்கிறது எனரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.