10
தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்களின் மூன்றாவது தேசிய மாநாடு மதுரையில், உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.இதில், தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி அசோசியேஷன் தலைவர் டாக்டர் பரத், தலைமை தாங்கினார்.மதுரை, மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.டாக்டர் ஆரோக்கிய பழம் வரவேற்புரையாற்றினார். மேலும், இந் நிகழ்ச்சியில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாகரன், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈஸ்வரன் ரமணன், முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அமுதா, மற்றும் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்புரை ஆற்றினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.