Home செய்திகள் இன்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு அமைச்சர் பேட்டி.

இன்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு அமைச்சர் பேட்டி.

by mohan

கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாததால், இலக்கு எட்டப்படும் என கேள்வி.கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த சிறப்பு முகாமில் ,2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்று காலை, மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் உள்ள சிறப்பு முகாமில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மூன்றாவது அலை வருவதற்கு முன்னதாகவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது .இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்கிறார். தடுப்பூசி போடுவது குறித்து ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரங்கள் அதிகாரிகள் மூலமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அலை வரும் பொழுது மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது போல சித்தரிக்கப்பட்டது. அதனை உடனடியாக பத்து நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பாதிப்புகள் குறைந்தது. அதைப்போல, தற்போது 3-வது மூன்றாவது அலை வருவதாக கூறப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அது முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும்.மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் பதினோரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி முகாம் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றார் கிராமப்புறங்களில், பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை பூசி போடு மையங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த போது, கிராமப்புறங்களில் முழுவதுமாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது ஆனாலும், பொதுமக்களில் வராது என்ற அச்சம் குறைந்துள்ளதால், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராமங்களில், முழுநேரமாக அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் மூலமாக தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசி தடுப்பு ஊசி போடாதவர்களை வீடு தேடி சென்று தடுப்பூசி போடப்படும் என்றார். கிராமப்புறங்களில் மூன்றாவது அலை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் இல்லாத நிலைதான் உள்ளது. எனவே மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இலக்கு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஎன்றார் மூர்த்தி.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!