Home செய்திகள் தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர் 8 பேரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர் 8 பேரை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள தியாகராஜா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சுயநிதி பிரிவில் பணிபுரியும் 8 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை கண்டித்து மூட்டா மற்றும்டானசெக் அமைப்பை சேர்ந்தவர்கள்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.கடந்த மூன்று ஆண்டுகளில் 44 பேர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி 8 பேரை பணி நீக்கம் செய்து அவர்களுக்கு மூன்று மாத சம்பளம் மட்டும் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது இதனை வன்மையாக கண்டித்து மூட்டா மற்றும் டான்செக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டுகளில் பணியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!