Home செய்திகள் நல்லதை மட்டுமே தருவோம் நல்லது மட்டுமே விதைப்போம். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

நல்லதை மட்டுமே தருவோம் நல்லது மட்டுமே விதைப்போம். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

by mohan

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்கள் பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு. ஒன்பது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து. சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்று விற்று வருவது வழக்கம். முருங்கைக்காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவயான பொருட்களை வாங்கி வருவார். ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம். இதை பயன்படுத்தி மற்ற முருங்கைகாய் யோடு கலந்து. மளிகை கடைக்காரரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்.பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால். மளிகை கடைக்காரர் அதை எடை போட்டுப் பார்ப்பதில்லை. ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார். காரணம் ராமசாமியின் நேர்மையும், நாணயமும் எல்லோரும் அறிந்தது. ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டுமென்று. ஒரு சமையல்காரர் வந்து கேட்க அவருக்காக மளிகைக் கடைக்காரர் எடை போட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.அன்று முழுவதும் மளிகை காரருக்கு தூக்கமே வரவில்லை. ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம் இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே. இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக் காயை வாங்கி ஏமாந்து விட்டோமே. அடுத்தமுறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடும் கோபத்தில் இருந்தார். நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார். நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்தார். கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று எத்தனை கிலோ என்று மளிகை கடைக்காரர் கேட்க. பத்து கிலோ என்றார் ராமசாமி.அவர் முன்னாலேயே எடை போட்டுப் பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த கோபத்தில் மளிகை காரர் பளார் பளார் என ராமசாமி கன்னத்தில் அறைந்தார். இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா ?கிராமத்துக்காரன் ஏமாற்ற மாட்டான் என்று நம்பி தானே எடை போடாமல் அப்படியே வாங்கினேன். இப்படி துரோகம் பண்ணிட்டியே என துப்ப. நிலை குளைந்துப் போனார் ராமசாமி. ஐயா என்னை மன்னிச்சிடுங்க. நான் ரொம்ப ஏழை எடைக்கல் வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லைங்க .ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டிலும் இன்னொரு தட்டில் முருங்கைகாய் வெச்சு தான் எடை போட்டுக் கொண்டு வருவேன். இதைத்தவிர வேறு எதுவும் தெரியாதுங்கய்யா. என்று காலை பிடித்து அழ. மளிகை கடை காரருக்கு தலையில் அடித்தது போல் இருந்தது. தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடமாக ராமசாமியை ஏமாற்ற நினைத்து. மளிகை கடைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார். என்பது தெளிவானது.இதுதான் உலக நியதி.நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். நல்லதே தந்தால் நல்லது வரும். தீமையை தந்தால் தீமை வரும். வருகிற காலங்கள் வேண்டுமானால் தாமதம் ஆகலாம். ஆனால் நிச்சயம் வரும்.ஆகவே நல்லதை மட்டுமே தருவோம் நல்லது மட்டுமே விதைப்போம். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!