தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் வாகனத்தை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய குற்ற எண் 108/15 u/s 294(b),307,506(i)IPC ,3 of TNPPDL வழக்கின் எதிரியான பகவதிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சரவணன் மகேஷ் (36), மோகன் ராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரின் மீது ஆம்னி வாகனத்தை மோதி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து செங்கோட்டை வட்ட காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சரவண மகேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா குற்ற வாளிக்கு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும், TNPPDL வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும்,2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த புளியரை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.