நாகமலை புதுக்கோட்டை தேனி மெயின் ரோட்டில் உள்ள நிலையூர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவை சேர்ந்த நாரணாபுரம் பொட்டல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மகேஸ்வரன் (எ) விக்னேஷ் (38). பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் இவருக்கு இரு மனைவிகள் உள்ளதாகவும் மனைவிகள் இருவரையும பிரிந்து நாகமலை புதுக்கோட்டை அருகே கீழேமாத்தூரில் தனி வீடு எடுத்து தங்கி பழைய பேப்பர் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் கடந்த 29 ம் தேதி சிவகாசிக்கு சென்ற நிலையில் நேற்று காலை கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் காயங்களுடன் மர்மமான முறையில்நிலையூர் கால்வாயில் சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய நாகமலை புதுக்கோட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.