2
இராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள உரக் கடைகளில் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உர இருப்பு விவரங்களையும், உரம் விற்பனை விலை, ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைத்து உடனடியாக உரம் பில் போட வேண்டும், மக்காச்சோளம் படைப்புழுவிற்கு பரிந்துரை செய்யப்படும் பூச்சிக்கொல்லி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது. ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் தனலட்சுமி மற்றும் கீதா ஆகியோர் உடன் இருந்தனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.