அன்னதானம் பொட்டலங்கள் வாங்குவதில் தகராறு.. ஏர்வாடியில் மீனவர் கொலை… ஒருவர் கைது…

இராமநாதபுரம் மாவட்டம் மாரியூரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது55). இவர் கீழக்கரை அருகேஉள்ள ஏர்வாடி முத்தரையர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஏர்வாடி தர்காவில் அன்னதானம் பொட்டலங்கள் வழங்கும் போது சண்முகராஜுக்கும் தர்காவில் தங்கி உள்ள மதுரையை சேர்ந்த அஜித் குமார் என்ற சாகுல் ஹமீது என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாகுல் ஹமீது சண்முகராஜை வயிற்றின் மீது ஏறி மிதித்து உள்ளார். இந்த நிலையில் இரவு வழக்கம்போல் சண்முகராஜ் ஏர்வாடி தர்கா அருகே தூங்கி விட்டார். காலையில் பார்க்கும் போது இறந்து கிடந்தார். இதையடுத்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ் விரைந்து வந்து நேரடி விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருடன் சண்டையிட்ட சாகுல் ஹமீது என்பவரை ஏர்வாடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சண்முகராஜா மனைவி சுதர்சனன்தேவி கூறுகையில் வயிற்றில் ஏறி மிதித்து தனது கணவரை கொலை செய்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..