கீழக்கரையில் பத்திர எழுத்தாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே லெட்சுமிபுரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் டிட்டோ இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்மநபர்கள் 25 பவுன் நகை மற்றும் 1,50,000 ரொக்கம் பணத்தை திருடி சென்றுவிட்டனர்.

இதுபற்றி கீழக்கரை காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்துவந்த கீழக்கரை காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் அந்த மர்மநபர்கள் தேடிவருகின்றனர். கீழக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..