Home செய்திகள் நிலக்கோட்டை அருகே வாய்க்கால் கரையை உடைத்து மண் திருடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே வாய்க்கால் கரையை உடைத்து மண் திருடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையும் , வைகை அணையில் இருந்து செல்லும் விவசாய பாசத்திற்குரிய பெரியார் பிரதான கால்வாயும் செல்கிறது. குத்தில்நாயக்கன்பட்டி அருகே இந்த கால்வாயை ஒட்டியவாறு செல்லுமிடத்தில் குல்லிசெட்டிபட்டி பிரிவு பகுதியில் அமைக்கப்பட்ட 11 வது மடையில் இருந்து பிள்ளையார்நத்தம், எத்திலோடு, ஆவாரம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மஞ்சளார் மற்றும் வைகை ஆறு, மருதாநதி ஆறுகளின் உபரி நீரைக் கொண்டு நிலக்கோட்டை ஒன்றியத்திலுள்ள கண்மாய்களை நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட கால்வாயை உள்ளது.

இந்த கால்வாயின் உடைய பகுதியிலிருந்த கரையை உடைத்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் லாரி டிராக்டர் போன்ற வாகனங்களில் இரவோடு இரவாக மண்ணை அள்ளி உள்ளார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் நேராகச் சென்று மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ஆத்திரத்தில் உள்ளார்கள். அரசாங்கம் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்ட வாய்க்கால் கரையை உடைத்து மண்ணை அள்ளிச் சென்ற சமூக விரோதிகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரும், உயர்மட்ட அதிகாரிகளும் தலையிட்டு அரசினுடைய ஓடை வாய்க்கால்களையும், ஓடைக்கரை களையும் பாதுகாக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஓடைக்கரை மண்ணை அள்ளியவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் ஆற்று ஓடை கரைகளையும், விவசாய நிலத்தில் இருக்கக்கூடிய பயிர்களையும் சேதப் படுத்தி வருகிறார்கள் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!