பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தெரு விளக்கு டைமர் மற்றும் மீட்டர் பெட்டி திறந்து கிடக்கும் அவலம்.

மதுரை கீழமாசி வீதி பி1 காவல் நிலையம் எதிரில் உள்ள தெரு விளக்கு டைமர் மற்றும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள மின்சார பெட்டி எப்பொழுதும் திறந்தே இருக்கிறது. தினமும் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம். இப்படி பாதுகாப்பற்ற முறையில் மின்சார பெட்டிகள் இருக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . மதுரை மாநகராட்சி மின்சாரத்துறை அதிகாரிகள் கவனித்து சரி செய்வார்களா??? ! என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..