Home செய்திகள் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி முகாம்..

வணிகர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி முகாம்..

by mohan

வணிகர்கள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சுரண்டை ஒய்எம்சிஏ அலுவலகத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, பேரூராட்சி, காவல்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் சுரண்டை வியாபாரிகள் சங்கம், ஒய்எம்சிஏ இணைந்து நடத்திய இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், வி கே புதூர் தாசில்தார் வெங்கடேஷ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா தலைமையிலான மருத்துவ குழுவினர் வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் இசக்கியப்பா,  ஆர்ஐ மாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,  ராஜேந்திரகுமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜெயபிரகாஷ், ராமர்,  சுரண்டை ஒய்எம்சிஏ தலைவர் பாலச்சந்திரன், வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், நிர்வாகிகள் ஏடி நடராஜன், சிவசக்தி முத்தையா, ரமேஷ், ராஜகுமார், முருகன் ஒய்எம்சிஏ நிர்வாகிகள் ஜேக்கப், அன்னப்பிரகாசம், கிருபாகரன், சுவிகர், ஜெகதீஷ், ஆபிரகாம், பூமணி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!