8
மதுரை தாய்இறப்பில் மர்மம் இருப்பதாக தம்பி மீது அக்கா போலீசில் புகார் செய்துள்ளார். மதுரை அருகே துவரிமான் கீழத் தெருவை சேர்ந்தவர் காமாட்சி அம்மா 83 . இவர் தனது மகன் ஜானகிராமன் வீட்டில் இருந்துவந்தார். இடப் பிரச்சினை காரணமாக இவருடைய மகள் அண்ணமயிலுக்கும் மகன் ஜானகிராமனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் காமாட்சி அம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்.இவருடைய இறப்பை மகளுக்கு தெரிவிக்காமல் ஜானகிராமன் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது .இந்த தகவல் பின்னர் தெரியவர மகள் அன்னம் மயில் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.