4
மதுரை மாவட்டம் திருமங்கலம் புதிய தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த விருதுநகர் இரும்புப் பாதை காவல்துறையினர் சிதறிக் கிடந்த உடல்களை ஒன்றாக இணைத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் சட்டைப்பையில் புகைப்படம் ஒன்று இருந்தது அதனை வைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தபோது குதிரை சாரி குளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் குரு என்பது தெரியவந்தது இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தா என விருதுநகர் இரும்புப் பாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.