திருவேடகத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கவிஞர் வைரமுத்து நடிகர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் நடைபெற்ற திமுகவின் தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் எல்.மூக்கையா இல்ல திருமண விழாவில் கவிஞர் வைரமுத்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் திரைத்துறையினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினர் முன்னதாக கவிஞர் வைரமுத்து மங்கலநாண் எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் கட்டினார் பின்பு பேசிய கவிஞர் வைரமுத்து மணமக்களை கவிதை நடையில் வாழ்த்தி பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..