மதுரை விமான நிலைய வளர்ச்சி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு

கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை அமைச்சர் உதயகுமார் இரண்டு முறை போட்டோவுக்கு போஸ் கொடுத்து சென்றுள்ளார் – மாணிக்கம் தாகூர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு இழப்பீடுத் தொகையை கொடுக்காமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் அக்கறையின்மையும், கவனமின்மையும் தான் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி முடக்கத்திற்கு முழுக் காரணம்என விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வேதனை.மதுரை விமான நிலைய வளர்ச்சி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்புமதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் சரியாக ஓராண்டிற்குப் பின் இன்று மாலை மதுரை விமான நிலைய கூட்டரங்கில் ஆலோசனைக் குழு தலைவர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மற்றும் துணைத் தலைவர் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் விமான நிலைய இயக்குநர் செந்திவளவன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு விமான நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கொரோனா காலத்தில் பயணிகளை சிறப்பாக கையாண்டதற்காகவும்,விமான நிலைய வளாகத்தினுள் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை 20 சதவீதம் குறைத்ததற்காகவும், பயணிகள் வசதிகளுக்காக மொபைல் ATM, Prepaid Taxi வசதி, கூடுதல் நுழைவு வாயில்கள் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டதுவிமான நிலைய விரிவாக்கப் பணிகள் கடந்த ஓராண்டாக சுணங்கி இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்ட முடிவில் செய்தியாளர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் சந்தித்தனர்.விமான நிலைய ஆலோசனைக் குழு துணைத் தலைவரும், மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் கூறுகையில்,மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது நிலத்தைக் கையகப்படுத்துவது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து இறுதி செய்வது.இதைத்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் கண்காணித்து வருகிறோம்.இறுதியாக ஒரு வருடம் முன்பாக நடந்த முந்தையக் கூட்டத்தில், இழப்பீட்டுத் தொகையாக நில உரிமையாளர்களுக்கு 54 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருந்தது.அதன் பின் இந்த ஓராண்டு காலத்தில் 40 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக கொடுக்கப் பட்டு இருக்கிறது.மொத்தம் 160 கோடி ரூபாய் இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.மொத்த தொகையும் மாவட்ட நிர்வாகத்திடம் இருக்கிறது. அந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கொடுப்பதை விட மாநில அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் என்ன வேலை இருக்கிறது?சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது, ஓடு பாதையை விரிவுப்படுத்துவது, விமான நிலைய எல்லைக்கு வெளியே உள்ள சுற்றுச் சாலையை விரிவுப்படுத்தும் போது வெளியே கொண்டு போவதா? அல்லது under pass சாலையாக கீழ்த்தள சாலையாக சுரங்கப் பாதையாக அமைப்பதா? என பல்வேறு விஷயங்களுக்குத் தீர்வு காண முடியும்.அக்கறையின்மையோடு, எந்தவிதக் கவனமின்மையோடு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் நடந்து இருக்கிறார்கள்.முழு இழப்பீடுத் தொகையையும் இந் நேரத்திற்குள் கொடுத்து முடித்திருக்க வேண்டும்.இன்றைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வரவில்லை. அடுத்த கூட்டத்திற்குள் முழுத் தொகையையும் நில உரிமையாளர்களுக்கு கொடுத்து விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டும் என இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுத்து, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி இருக்கிறோம்.மொத்தம் 2199 உரிமையாளர்களில், ஆயிரம் உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பீடு தொகையாக 94 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருகிறது.மீதி உள்ள 1199 உரிமையாளர்களுக்கு கிட்டத்தட்ட 67 கோடி ரூபாய் தொகையை விரைந்து மாவட்ட நிர்வாகம் கொடுத்து மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தி தர வேண்டும்என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேட்டி அளித்தார்.போட்டியின் போது விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும், மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவருமான மாணிக் தாகூர் எம்.பி. உடனிருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..