அமைச்சர் தொகுதியில் ஆகாயத்தாமரை வளர்ந்து துர்நாற்றம் வீசும் அவலம் .

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் ராமர் கோவில் தெரு ராமர் கோவில் அருகே அமைந்துள்ள ஊரணி கரையில் முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இது மேற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை அவருடைய சொந்தத் தொகுதியிலேயே பொதுமக்கள் கொடுத்தும் புகார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . ஊரணி கரையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது உடனடியாக ஆகாயத்தாமரை அகற்றிவிட்டு கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும் ஊரணி கரையை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்த வகையில் வழிவகை செய்து குடிநீர் ஆதாரத்தை பெருக்க உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பார்களா??????? எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..