தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாகசட்டமன்ற தொகுதி 2021 காண பொதுத் தேர்தல் சம்பந்தமாக பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் கூடல் நகர் பகுதியில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில கழக துணைச் செயலாளர்’அக்பர், கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆறுமுகம் நயினார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் அப்போது அவர்கள் கூறியதாவது வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அவர்களுக்கு கட்டுப்பட்டு முழுவேகத்துடன் கழகப் பணி செய்ய வேண்டும். அனைத்து பூத் கமிட்டி களுக்கும் முகவர்களை நியமித்து இருக்கும் நிலையில் முன்னாள் கழக நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டி வலுப்பெற பணிகள் தீவிரப்படுத்த வேண்டும், வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட துகிலை மண்டலங்களாக பிரித்து பணி செய்ய வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார் நிகழ்ச்சியில் அவைத்தலைவர் காமாட்சி ராஜா, பொருளாளர் வேல்முருகன் . ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.