Home செய்திகள் நள்ளிரவில் இரு சக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து;இருவர் பலி…

நள்ளிரவில் இரு சக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து;இருவர் பலி…

by mohan

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டையிலிருந்து – சாம்பவர் வடகரை செல்லும் பிரதான சாலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து ஏற்பட்டது. கீழச்சுரண்டை, அம்பேத்கர் தெருவைச் சார்ந்த காசிமணி  என்பவரது மகன் முத்துக்குமார்  (வயது-30)  கூலி வேலை செய்து வரும் இவர்.  தனது இருசக்கர வாகனத்தை பெட்ரோல் இல்லாத காரணத்தினால் உருட்டிக் கொண்டு பெட்ரோல் போடுவதற்காக சுரண்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார், அப்போது வீரகேரளம்புதூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது ஆய்க்குடியில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் கேட்டரிங் படித்து விட்டு அது தொடர்பான வேலை செய்து வரும் சிவா (வயது-22) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமுற்ற முத்துக்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில் முத்துக்குமார் என்பவர் தென்காசி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சிவா என்பவர் உடல் நிலை மேலும் மோசமடையவே மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுரண்டை எஸ்ஐ ஜெயராஜ் வழக்கு செய்தார் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மேல் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!